பழனி
[திண்டுக்கல் ]] சாலையில் சத்திரபட்டிக்கு மேற்கில் மூன்று கல் தொலைவில்
இவ்வூர் அமைந்துள்ளது . சுதரபாண்டியனின் கல்வெட்டில் குறிப்பிட்ட
திருபாக்கியம் என்ற ஊரே இந்த விருப்பாட்சி .
நாயக்கர் ஆட்சிக்காலத்தில் வருமானம் தரக்கூடிய ஜமினாக இருந்துவந்துள்ளது .
[தொகு] திருமலை சின்னப்பா நாயக்கர்
இப்பாளையத்தை அமைத்தவர்கள்
ராஜகம்பளம் என்று சொல்லப்படும் நாயக்கர் இனத்தின் உட்பிரிவினர் . இவர்கள் தங்களை தொட்டிய நாயக்கர்கள் என்றும் அழைத்துக்கொள்கின்றனர் . இவர்கள்
விஜயநகர்
மன்னரிடம் போர் வீரர்களாக பணியாற்றியவர்கள் . அடைப்பம் என்ற உரிமையையும்
பெற்றவர்கள் , அடைப்பம் என்பது உயர் ஜாதியினருக்கு மட்டும் கிடைக்கும்
உரிமை . கி.பி,1381 இல் தில்லி பாதுசாவின் சார்பாக பாலு சாயிபு என்பவர்
விஜயநகரப் பேரரசின் மீது படையெடுத்துவர விஜயநகர பேரரசின் சார்பாக
விருப்பாட்சி பாளையக்காரரின் முன்னோரான கம்பளத்தார்கள் மேலப்பட்டி
சின்னப்பா நாயக்கர் படைநடத்தி பாலுசாயுபுவை ( இசுலாமியனை )
வெற்றிக்கண்டார் என்பதால் ராயர் மிகவும் மகிழ்ந்து சின்னப்பா நாயக்கருக்கு
பல வெகுமதிகளை அளித்துள்ளார் . அத்துடன் மேலப்பட்டி சின்னப்பா நாயக்கரின்
வம்சா வழியினர் தங்கள் பெயருக்கு முன் ராயரின் பெயரான திருமலை என்பதை
பயன்படுத்திக்கொள்ள அனுமதியும் அளித்துள்ளார் என்பதால் விருப்பாட்சி
பாளையத்தில் வரும் அனைவரும் தங்கள் பெயருக்கு முன் திருமலை என்பதை போடும்
வழக்கம் கொண்டு இருந்தனர் .
[தொகு] தமிழகம் வருதல்
இசுலாமிய மன்னன் ஒருவன் இவர்கள் இன பெண்ணை திருமணம்
செய்யக்கேட்டதாகவும் அதனால் தெற்கு நோக்கி வந்தனர் என்று கூறுகின்றனர் .
இவர்கள் தெற்கு நோக்கி சின்னப்பா நாயக்கர் தனது இனத்தாருடன் வந்து
உருவாக்கிய ஊர் தற்போது உள்ள
குத்துளுப்பை என்பது .
[தொகு] பாளையகார்களின் வரலாறு
இவருடைய(சின்னப்பா நாயக்கர் ) தம்பி அப்பண்ண நாயக்கர் குத்துளுப்பைக்கு
தெற்காக காடுவெட்டி வீடுகள் அமைத்து கொத்தப்பள்ளி தாதமபேட்டை என்ற ஊரை
அமைத்து கோட்டை கட்டினார் . இவருடைய மற்றொரு தம்பி எர்ரன்ன நாயக்கர்
குதுளுப்பைக்கு கிழக்காக ரெண்கமலைக்கு பக்கத்தில் இடையகோட்டை என்ற ஊரை
உருவாக்கினர். தனது தம்பிகளின் இருப்பிடத்துக்கு மேற்காக ஒரு கோட்டையை
அமைத்து பெரிய கோட்டை என்று பெயர் சூடினார் . இங்கு தனது குலதெய்வமான
லேக்குவம்மாவுககும், கதிர நாதருக்கும் கோவில் கட்டி பூஜை
செய்துவந்துள்ளார் . இன்றும் இவர்களின் வம்சாவளியினர் வழிபட்டு
வருகின்றனர் . இவர் மேலும் வராககிரி மலை சாரலின் வீடுகள் அமைத்து பெருமாள்
குளம் அமைத்து நீல மலை அழகருக்கும் , விருப்பாட்சி இசுவரனுக்கும் கோவில்
அமைத்து
விருப்பாட்சி என்ற பட்டணத்தை உருவாக்கினார் .
இப்பகுதிக்கு கிழக்கில் கலக்கரப்பன் குன்றில் குழந்தை வேலப்பர் கோவிலும் ,
குழந்தை வேலர் மலையில் குழந்தை வேலர் கோவிலும் உருவாக்கினார் .
[தொகு] பல ஊர்களை உருவாக்குதல்
மேலும் தனது சொந்தகாரர்களை தனி தனியே ஊர்களை அமைத்து குடிபெற செய்தார்
, சிக்கம்மா நாயக்கரின் பெயரால் சிக்கம்ம நாயக்கர் பட்டி என்றும் ,
கள்ளமந்த நாயக்கர் என்பவர் கள்ளிமந்தயம் என்றும் , கரியப்பா நாயக்கர்
என்பவர் கரியாம்பட்டி என்ற ஊரையும் , புலியப்பா நாயக்கர் என்பவர் புலியூர்
நத்தம் என்றதையும் , குறி சின்னம்மா நாயக்கர் கீரனூர் என்ற ஊரையும் ,
கொத்த வேலப்ப நாயக்கர் என்பவர் கொத்தயம் என்ற ஊரையும் , மஞ்ச நாயக்கர்
என்பவர் மஞ்ச நாயக்கர் பட்டி , சிந்தலவாட நாயக்கர் என்பவர்
சிந்தலவாடப்பட்டி , போடப்பா நாயக்கர் என்பவர் போடுவார் பட்டி என்பதையும் ,
பொருலாண்டி நாயக்கர் என்பவர் பொருளா நாயக்கர் பட்டி என்பதையும் , வேலப்ப
நாயக்கர் என்பவர் குருமாபட்டி என்ற கிராமங்களையும் உருவாக்கியதாக
பாளையப்பட்டு வம்சாவளி கூறுகிறது .
[தொகு] கதிர திருமலை சின்னப்பா நாயக்கர்
இவரது மகன் கதிர திருமலை சின்னப்பா நாயக்கர் மதுரை
விசுவநாத நாயக்கர்
அவர்களின் சிறப்பு நண்பராக இருந்தவர் , மேலும் இது சிறப்பு பாளையமாகவும்
இருந்து வந்துள்ளது , அவரின் மகன் திருமலை குப்பண்ணா நாயக்கர் பெரிய
மலையில் பெரியூர் என்ற ஊரை உருவாக்கினார் , அதில் மங்களநாத சாமி கோவில்
அமைத்துள்ளார் . இதற்கு மேற்கில் பாச்சலூர் என்ற ஊரையும் , வடகாடு ,
கண்ணனூர் , வென்னமலை என்ற கிராமங்களை உருவாக்கி அதில் பழங்குடியினரை
குடியமர்த்தி பழங்கள் , காய்கள் சாகுபடி செய்ய உத்தரவு இட்டுள்ளார் .
இவருக்கு திருமலை பலபத்திர ராம சின்னப்பா நாயக்கர் பட்டக்காரர் என்றும் ,
ரெகுராம நாயக்கர் என்றும் இரண்டு மகன்கள் இருந்துவந்தனர் . முதலாவது மகன்
பாளையத்தை ஆட்சி செய்ய , இளையவர் தானும் ஆட்சி செய்ய வேண்டும் என்பதால்
ரெண்கமலைக்கு கிழக்காக கவுதமர் கோட்டை , குட்டம் , கல்வார்பட்டி,
கூவனுத்து, புதுக்கோட்டை முதலிய கிராமங்களை உருவாக்கி அப்பகுதியை ஆட்சி
செய்து வந்துள்ளார் , இவரது காலத்தில் நன்காஞ்சி ஆற்றில் அணை கட்டியதோடு
வாய்க்காலும் வெட்டியுள்ளார் . இவர் சின்ன குளம் , பெரிய குளம் என்ற
குளங்களையும் வெட்டி உள்ளார் . இவர் உம்பிளியரை ஒரு பகுதியில் குடி
அமர்த்தி உம்பியார் பட்டி என்ற கிராமத்தை உருவாக்கினார் . கனககிரி குழந்தை
வேலப்பருக்கு விக்ரகம் , ரதம் , தேரோட்ட நிகழ்வையும் செய்துள்ளார் .
[தொகு] பல இனத்து மக்களையும் குடியேற்றல்
திருமலை எர தம்ம சின்னப்பா நாயக்கர் காலத்தில் சடையான் குளம் , சடையன்
அணை ஒன்றையும் ஏற்படுத்தி உள்ளார் , இக்குளத்திற்கு பின்னால் அழகு
நாச்சியம்மா கோவில் , சிவன் கோவில் போன்றவற்றை அமைத்து அதில்
பிராமணர் ,
இல்லத்து பிள்ளைமார் ,
பண்டாரம்
போன்ற இனத்தோரை கோவில் நிர்வாகம் செய்ய கோவிலுக்கு சுற்றி
குடியமர்த்தினார் . இவருக்கு பின் திருமலை வராககிரி சின்னப்பா நாயக்கர்
காலத்தில் தாசரி நாயக்கர் என்பவரின் பெயரால் தாசரி பட்டி , புதுகோட்டை
என்ற கிராமமும் , லக்கம்மா நாயக்கர் பெயரால் லக்கன்ன கோட்டை என்ற
கிராமமும் , அதப்ப நாயக்கர் என்பவரின் பெயரால் அதிக்கோட்டை என்ற கிராமமும்
, கொல்லம்மா நாயக்கர் என்பவர் கொல்லப்பட்டி , சின்னவேலப்பா நாயக்கர்
சின்னவேலம்பட்டி , காளாஞ்சி நாயக்கர் காளாஞ்சி பட்டியையும் , அன்னம்மா
நாயக்கர் அன்னம்மா நாயக்கர் என்ற ஊரினையும் , காபிலிய நாயக்கர் என்பவர்
காபிலிய பட்டி , அப்பள்ள நாயக்கர் என்பவர் அப்பிளிகை , வீரப்ப நாயக்கர்
என்பவர் வீரலப்பட்டி என்ற கிராமங்களை உருவாக்கி வந்துள்ளனர் ,. மேலும்
தங்களுக்கு என்று பல இனத்து மக்களையும் இங்கு குடி அமர்த்தினர் , அக்கால
கட்டத்தில் மேற்கு தமிழகம் பெரும்பாலும் ஊர்கள் இல்லாமல் காடுகளாக இருந்து
வந்துள்ளன . இவ்வாறான குடியேறியவர்கள் பல கிராமங்களை உருவாக்கி அங்கு
தங்களை குடி அமர்திக்கொண்டனர் .
[தொகு] விவசாயத்தை பெருக்கினார்
இவருடைய மகன் நயினாத்த திருமலை சின்னப்பா நாயக்கர் வைகாணி , மண்டவாடி ,
தங்கச்சி அம்மாபட்டி கிராமங்களை உருவாக்கி உள்ளனர் . இவருக்கு
பாதை காவலர் என்ற பட்டமும் மதுரை மன்னர்
முத்து வீரப்ப நாயக்கர்
அவர்களால் வழங்கப்பட்டது . இவருடைய மகன் திருமலை குப்பள்ள சின்னப்பா
நாயக்கர் நல்லதங்காள் ஓடை ஆற்றில் அணையை கட்டி வாய்கால் வெட்டி உள்ளார் ,
இவர் காலத்தில் கருங்குளம் , சிந்தல்வாடான் பட்டியில் உள்ள கவுண்டன் குளம்
(
காபிலியர்
குளம் ) , மஞ்சனாயக்கன் பட்டியில் செங்குளம் , பொடுவாற்பட்டியில் பெரிய
குளம் ஆகிய பல குளங்களை வெட்டி நீர் பாசனத்துக்கு , விவசாயத்துக்கு பயன்
பெயர் செய்துள்ளனர் .
[தொகு] மதுரையும் விருப்பட்சியும்
இவரது காலத்தில் மதுரையில்
திருமலை நாயக்கர்
ஆட்சி செய்து வந்துள்ளார் . மதுரை நாயக்கர்களுக்கும் மைசூருக்கும் நடந்த
போரில் விருப்பாட்சி பாளையமும் பங்கு பெற்றது , அதே போல சேதுபதி மன்னரிடம்
மதுரை நாயக்கர் போர் செய்த போதும் விருப்பாட்சி மதுரைக்கே சாதகமாக
இருந்தது . இவரது மகன் திருமலை தாசரி சின்னப்பா நாயக்கர் கொத்தயம்
கிராமத்தில் வேப்பங்குளம் , பொருலூரில் சின்னக்குளம் போன்றவற்றை
வெட்டியுள்ளார் . இதற்கு பின் பட்டமேற்ற திருமலை பாபன்ன சின்னப்பா
நாயக்கர் மதுரையில்
சொக்கநாத நாயக்கர்
மன்னராக இருந்தார் , அப்பொழுது தஞ்சை மற்றும் மதுரை நாயக்கர்களுக்கு போர்
ஏற்பட மதுரைக்கு ஆதரவாக விருபாட்சி இருந்தது , இவரது மகன் திருமலை பாபன்ன
சின்னப்பா நாயக்கர் குமாரர் விருப்பாட்சியில் கதிரனார் சிங்கப்பெருமாள்
கோவில் , சிவன் கோவில் கட்டினார் , மேலும் பிராமணர் , பண்டாரங்களை குடி
அமர்த்தினர் , இவருக்கு பின் திருமலை முத்துவேல் சின்னப்பா நாயக்கர்
காலத்தில் பெரியக்கோட்டை கோவிலுக்கு ரத்தமும் , விக்ரகங்களும்
செய்துள்ளார் , மேலும் ஏழை பிராமணர் , பண்டாரம் போன்றோர்களுக்கு மானியமாக
பல நிலங்களை தந்துள்ளார் ,
[தொகு] மைசூர் கட்டுப்பாடு
இதன் பின் திருமலை வேங்கட சின்னப்பா நாயக்கர் நீலமலை அழகிரி கோவில் ,
மேலும் அங்கு தனது முன்னோர்களின் சிலைகள் முதலியவற்றை செய்தார் , ஏனைய
ராஜகம்பளம்
இனதோர்களை போலவே வேட்டை ஆடுவதில் ஆர்வம் கொண்டவர் , இவருக்கு பின் இவர்
மகன் எதிராமானஜகிரி தமிழ் பற்று கொண்டவர் புலவர்கள் பலரை ஆதரித்துள்ளார் ,
இவரது பாட்டியான நல்லிகாமு வேங்கிமளைக்கு படிகள் அமைத்தும் , முத்து
சமுத்திரம் என்ற பெயரில் ஒரு குளமும் வெட்டியுள்ளார் , அடுத்த
பாளையக்காரர் வராககிரி சின்னப்பா நாயக்கர் காவேரியம்மா பட்டி ,
கரட்டுப்பட்டி , ரெட்டியாம்பட்டி ஊர்களை அமைத்து குளங்களை வெட்டி உள்ளார்
, இதற்க்கு அடுத்து திருமலை தாசாரி சின்னப்பா நாயக்கர் காலத்தில் தான்
மதுரை நாயக்கர் ஆட்சி முடிவு பெறுவதால் குழப்பங்களும் , சண்டைகளும்
பாளையம் முழுவதும் இருந்தது , இதற்க்கு பின் இந்தபாளையம் மைசூர்
கட்டுபாட்டில் வருகிறது . என்றாலும் வரி கட்ட மறுத்தே வந்துள்ளனர் ,
இவர்களின் வரி வாங்க மைசூர் மன்னர்கள் பல இடர்பாடுகள் செய்தனர் ,
[தொகு] விடுதலை போராட்டம்
இப்பாளையம் பிற்காலத்தில் பாளையக்கரர் கூட்டமைப்பு ஏற்படுத்தி ஆங்கிலேயருக்கு எதிராக போராடி மாண்ட பலரை தந்துள்ளது ,பார்க்கவும் :
விருப்பாச்சி கோபால நாயக்கர்