Wednesday, 7 December 2011

ராமகிரி பாளையம்,அம்பாத்துறை பாளையம்

ராமகிரி பாளையம்

திண்டுக்கலில் இருந்து குஜிலியம்பாறை வழியாக கரூர் செல்லும் சாலையில் அமைத்துள்ள இவ்வூர் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் பாளையமாக இருந்தது , ராமகிரியை சாமா நாயக்கர்கள் என்ற ராஜகம்பளம் குடியினர் 40 தலைமுறையாக ஆட்சி செய்து வந்துள்ளனர் , இவ்வூரில் ஒரு கோட்டை உருவாக்கி அங்கு தங்கள் இன மக்களையும் சுற்று பட்டிகளில் வாழும் பிற மக்களையும் நிர்வாகித்து வந்துள்ளனர் , இவர்களுக்கு இரும்பு முறுக்கி சாமா நாயக்கர் , தலைவெட்டி சாம நாயக்கர் என்ற பட்டங்களும் உண்டு . இவர்கள் பழனி கோவிலுக்கு பல சாத்திரங்களை கட்டி உள்ளனர் , இவர்கள் கலியான நரசிம்ம சாமி கோவிலை அமைத்ததோடு பல தானங்களையும் செய்து வந்துள்ளனர் , இவர்கள் பல ஊர்களை உருவாக்கி உள்ளனர் மேலும் பிற்காலத்தில் தமிழகதிற்கு குடியேறிய தங்கள் இனத்தவர்களான வடுகர்என்று சொல்லும் நாயக்கர் இன மக்களை தாங்கள் வாழும் பகுதியில் குடியமர்த்தினர் .
அம்பாத்துறை பாளையம்:
 கி.பி,1600 இல் விசுவநாத நாயக்கர் அவர்களால் நிறுவப்பட்ட 72 பாளையங்களில் அம்பாத்துறையும் ன்று , கி,பி.௧௮௦௧ முதல் இது ஜமினாக இருந்து வந்துள்ளது . பாளையம் மற்றும் ஜமின் நிர்வாகத்தை செய்தவர்கள் கம்பளத்து நாயக்கர் என்று சொல்லும் நாயக்கர் இனத்து மக்களே , ஜமின் காலத்தில் கட்டப்பட்ட அரண்மனை இன்றும் அப்படி உள்ளது , இங்குள்ள காளியம்மன் கோவில் , காட்டு மாரியம்மன் கோவில் போன்றவற்றை இவர்களே கட்டி உள்ளனர் . விருப்பாச்சி கோபால நாயக்கர்ஆங்கிலேயருக்கு எதிராக பாளயகார்களைக் கொண்டு கூட்டமைப்பு ஏற்படுத்தும் நிலையில் இந்த பாளையகார்களும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டனர் , மேலும் இவர்கள் மதுரை நாயக்கர் மன்னர்களிடம் நெருங்கிய மக்களாகவும் இருந்து வந்துள்ளனர் .

நத்தம் பாளையம்

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஊர் , நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் பாளையமாக இருந்தது , கி. பி. 10 ஆம் நூறாண்டில் பிராமணர்களும், வணிகர்களும் ( செட்டியார்களும் ) வாழ்ந்த பகுதியாக இது இருந்து வந்தது . கி.பி. 11 நூற்றாண்டில் ஆட்சி செய்த சுந்திர சோழ பாண்டியன் பிராமணர்களுக்கும் , வணிகர்களுக்கும் இப்பகுதியில் பல மானியங்களை தந்துள்ளதாக கல்வெட்டு கூறுகிறது . நத்தம் பகுதியை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் லிங்க நாயக்கர் ஆட்சி செய்துள்ளார் , இவர் கட்டிய கோட்டை இன்றும் இடிந்த நிலையில் உள்ளது , பிறகு இப்பகுதிக்கு காவலுக்காக கள்ளர் மற்றும் வலயர்களை நியமித்துள்ளார் ,

[தொகு]செப்பேடுகள்

லிங்க நாயக்கரினை பற்றிய பல செப்பேடுகள் இந்த பகுதியில் கிடைத்துள்ளது , இவர் ராஜகம்பளம் என்ற நாயக்கர் பிரிவினை சேர்ந்தவர் , மதுரை மன்னர் சொக்கநாத நாயக்கர் அவர்களுக்கு தளவாயாக பணி புரிந்தவர் இவரை தொட்டியர் என்றும் ஒரு செப்பேட்டில் அழைக்கப் படுகிறார் , மதுரை ஆட்சியை தானே கைப்பற்றிவிட எண்ணி பல சூழ்சிகளை சொக்கநாத நாயக்கருக்கு எதிராக செய்தவர் என்றாலும் சொக்கநாதர் இவரின் சூழ்ச்சியை முறியடித்தார் . வடக்கில் இருந்து மதுரைக்கு வரும் வழியில் நத்தம் உள்ளதால் வடக்கில் இருந்து வரும் அனைத்து படை எடுப்புகளையும் சந்தித்து உள்ளது , இதனால் தங்கள் இனத்தவர்களோடு கள்ளர்கள் , வலையர்கள் , குடும்பர்கள் போன்றோரையும் காவலுக்காக நியமித்துள்ளார் . இங்கு வீரக்குடி வெள்ளாளர் என்று அழைக்கப்படும் பிள்ளைமார் ஜாதியை சேர்ந்தவர்களுக்கு பல மானியங்களை அளித்துள்ளார் , மேலும் குடும்பர்களுக்கு வாய்க்கால் மேற்பார்வை செய்ய பட்டயம் செய்துள்ளார் , இது இன்றும் இங்குள்ள குடும்பர் ( பள்ளர் ) இனத்தவர்களிடம் உள்ளது ,

[தொகு]கோவில்களை அமைத்தல்

கி.பி,1773 இல் சில்லிளிங்கய்ய நாயக்கர் இப்பகுதியை ஆட்சி செய்துக்கொண்டு இருக்கும் நிலையில் நத்தம் கயிலாசநாதர் கோவில் மண்டபங்களை அமைத்துள்ளார் . கி..பி.1791 இல் கல்வெட்டு ஒன்று சில்லப்பா நாயக்கர் பட்டியை சேர்ந்த முத்துலிங்க நாயக்கர் கோவில்பட்டி சாத்திரத்தை மானியமாக தந்ததை கூறுகிறது , லிங்க நாயக்கர் சுவர் ஓவியங்களை பல அமைத்துள்ளார் , லிங்க நாயக்கரின் உருவமும் இந்த கோவிலில் அமைக்கப்பட்டுள்ளது . தெலுங்கு எழுத்துகளால் இவரின் பெயர் இருந்துவந்துள்ளது என்பதில் இருந்து தெலுங்கு மொழியை எழுத தெரிந்தவர்களாக இங்குள்ள நாயக்கர்கள் அக்காலத்தில் இருந்து வந்துள்ளனர் . பலர் இப்பாளையத்தை ஆட்சி செய்தாலும் லிங்க நாயக்கரை பற்றிய செய்தி மட்டுமே அதிக அளவில் காணப்படுகிறது .

[தொகு]மேற்கோள்கள்

  • திண்டுக்கல் மாவட்ட தொல்லியல் கையேடு - முனைவர் சீதாராம் குருமூர்த்தி
பகுப்பு: 
 

ஆயக்குடி பாளையம்

திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு கிழக்கில் இருக்கும் இவ்வூர் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் பாளையமாக இருந்து வந்தது . இப்பாளையத்தை ஆட்சி செய்தவர்கள்ராஜகம்பளம் என்று அழைக்கப்படும் நாயக்கர் இனத்தின் உட்பிரிவினை சேர்ந்தவர்கள் . இவர்கள் பல கிராமங்களை உருவாக்கி உள்ளனர் மேலும் தங்களை தீவிர வைனவர்களாய் காட்டிக்கொள்ள அகோபிள நாயக்கர் என்றும் அழைத்துக்கொள்கின்றனர் .

பொருளடக்கம்

  [மறை

[தொகு]பாளைய வரலாறு

இப்பாளையத்தின் வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆந்திர பகுதியில் அரசாட்சி செய்தவர்கள் . இசுலாமிய மன்னனான பாதுசா , நாயக்கர் வீட்டு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள விரும்பியதாகவும் . பெண் கொடுக்க மனம் இல்லாமல் நாயக்கர் வம்சாவளியினர் இடம்பெயர்ந்து ஆணைகொண்டி தேசத்தில் இருந்த விஜயநகரம்பகுதிக்கு செல்கின்றனர் . இதனை கேள்விப்பட்ட விஜயநகர மன்னர் அச்சுத தேவராயர் இந்த நாயக்கர்களை தம்முடைய படையில் சேர்த்து பல வெகுமதிகளை தந்துள்ளார் . இவர்கள் அகோபளம் என்ற ஊரில் இருந்து வந்தனர் . இவர்கள் பிறகு தெற்கு நோக்கி நகர்ந்து ஆயக்குடி பகுதியில் பலர் குடியேறினர் .

[தொகு]பெரிய ஒபயகொண்ட நாயக்கர்

முதலாவதாக இந்த பாளையத்தை உருவாக்கியவர் பெரிய ஒபய கொண்ட நாயக்கர் , இவர்கள் அகோபிளம் என்ற ஊரில் இருந்து வந்ததால் தங்களை அகோபளியர் என்று அழைத்துக்கொள்கின்றனர் . இவர் மகன் ஒபய கொண்டாம நாயக்கர் அகோபளிசுவரர் பெருமாள் கோவில் கட்டினார் , குட்டப்பள்ளம் , பெரும் பள்ளம் , கவுஞ்சி ஆகிய ஊர்களை உருவாகினர் . இவரது மகன் கொண்ட நாயக்கர் ஒபுளாபுரம் என்ற ஊரினை அமைத்து அங்கு கோட்டை ஒன்றையும் கட்டினார் , ஐந்தாவதாக பட்டம் ஏற்ற குமாரக் கொண்டாம நாயக்கர் புது ஆயக்குடி என்ற ஊரினை உருவாக்கி அங்கு விறுகுளம் என்ற குளத்தினை வெட்டி உள்ளார் ,

[தொகு]விவசாயத்தை பெருக்கினர்

6 வது பட்டக்காரர் முத்து கொண்டாம நாயக்கர் பெரிய குளம், நடுக்குளம் என்ற குளங்களை வெட்டி தண்ணீர் வருவதற்காக வருதாபடி மாற்றில் அணை ஒன்றை கட்டினார். 7 அவது பட்டக்காரர் பகடல் கொண்டாம நாயக்கர் மேலக்கோட்டை என்ற கோட்டையை அமைத்து ஊர்களை கோட்டையை சுற்றி அமைத்தார் . குமார நாயக்கர் குளம் ஒன்றையும் அமைத்தார் . 8 வது மன்னர் ஒபுள கொண்டாம நாயக்கர் எர்ரம் நாயக்கர் பட்டி , கஞ்ச நாயக்கர் பட்டி , உருகுவார் பட்டி , கரிசல்குளம் போன்ற ஊர்களை உருவாக்கினார் , 9 வது பட்டம் பெற்றவர் ஏற்ர கொண்டாம நாயக்கர் பொட்டம்பட்டி கிராமத்தையும் , ஆயக்குடி சேர்ந்த தேவ நாயக்கர் குளம் ஒன்றையும் அமைத்துள்ளார் , 10 வது பட்டதரான முத்தியாலு கொண்டாம நாயக்கர் கணக்கம் பட்டி கிராமத்தையும் , பட்டிகுளம், மாப்ளை நாயக்கர் குளம் முதலியவற்றை அமைத்துள்ளார் , 11 வது அரசர் கொண்டாம நாயக்கர் சித்த வலசை மற்றும் 18 கிராமங்களை உருவாக்கினார் . 12 வது குமார் கொண்டாம நாயக்கர் கோம்பை பட்டி ஊரினையும் , ஊமை குமார சேர்வைகார குளம் , செவ்வப்ப நாயக்கர் குளம் முதலியவற்றை உருவாக்கினார் , 13 வது பட்டர் கொண்டாம நாயக்கர் சேர்வை காடுகளை வெட்டி விளை நிலங்களாக பல ஊர்களை உருவாக்கினார் .

[தொகு]போரில் பங்கு கொள்ளல்

14 வது குமார கொண்டாம நாயக்கர் பாப்பன் குளம் வாய்கால் அமைத்ததோடு அக்ரகாரம் முதலியவற்றை அமைத்து பிராமணர்களை , பண்டாரங்களை குடி அமர்த்தி உள்ளார் . ஏழை பிராமணர்களுக்கு பல தானங்களை தந்துள்ளார் , பெருமாள் குளம் , பசளை நாயக்கர் பட்டி முதலிய கிராமங்களையும் உருவாக்கி உள்ளார் , இவரது காலத்தில் மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சிக்காலம் . மைசூர் படைக்கு எதிராக நடைபெற்ற மூக்கருப்பு போரில் ஆயக்குடி பாளையமும் மதுரை நாயக்கர்களுக்கு உதவி உள்ளது , தஞ்சைக்கு எதிரான மதுரை நாயக்கர் போரிலும் பங்கு கொண்டுள்ளது , 15 வது கருத்த கொண்டாம நாயக்கர் வெப்பம் வலசை , செல்லப்பக் கவுண்டன் வலசை கிராமங்களை உருவாக்கி உள்ளார் , 16 வது பட்டதரசர் குமார கொண்டாம நாயக்கர் வேட்டை ஆடுவதில் வல்லவர் , 17 வது ஒபுள கொண்டாம நாயக்கர் இவரது காலத்தில் பல்லாயிரம் வீரர்களை விருப்பாச்சி கோபால நாயக்கர் படைக்கு தந்து உள்ளார் , கோபால நாயக்கரும் இவரும் உறவினர்கள் . ஆங்கிலேயரை எதிர்த்து வந்ததால் இப்பாளையம் அழிக்கப்பட்டது.

[தொகு]மேற்கோள்கள்

  • திண்டுக்கல் மாவட்ட தொல்லியல் கையேடு - முனைவர் சீதாராம் குருமூர்த்தி
பகுப்பு

அம்மையநாயக்கனூர் பாளையம்


திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஊர், நாயக்கர் ஆட்சிக்காலத்தில் சிறப்பு பெற்ற பாளையமாகவும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஜமினாகவும் இருந்து வந்த வரலாற்று சிறப்பு மிக்க ஊர் ,

பொருளடக்கம்

 [மறை

[தொகு] பாளையம் உருவாகுதல்

பாளையத்தின் முன்னவரான பெஞ்சை மாகையா நாயக்கர் அவர்கள் கி.பி.1435 இல் விஜயநகர மன்னரிடம் போர் வீரர்களாக பணிபுரிந்தவர்கள் . விசுவநாத நாயக்கர் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட 72 பாளையங்களில் ஒன்றாக இருந்து வந்தது . இவர்கள் மதுரைக்கு காவல் என்ற உரிமையை பெற்றுவந்தனர் . இவர்கள் ராஜகம்பளம் என்ற நாயக்கர் இனத்தின் உட்பிரிவினர் . மதுரைக்கு காவலாக இவர்கள் இருந்ததால் பெஞ்சை மாகையா நாயக்கர் மற்றும் அவர் சார்த்த கம்பளத்து நாயக்கர்கள் மதுரைக்கு வடமேற்கில் சிறுமலை மற்றும் சுற்றில் உள்ள சில கிராமங்களில் குடியமர்ந்தனர் . இதில் இவர்கள் ஒரு கோட்டையை உருவாக்கி அம்மைய நாயக்கனூர் பாளையத்தை உருவாக்கினர் ,

[தொகு] ஊர்களை உருவாக்குதல்

வேடசந்தியூர் , வெள்ளோடு , பச்சைமலன் கோட்டை ம,சம்புதரைகோட்டை, ஒருதநாட்டு கிராமம் , பாளயக்கவுண்டன் பட்டி , எதுலூட்டு , சிதர்னத்தம். மேட்டுப்பட்டி , மட்டப்பாறை , பள்ளப்பட்டி , குள்ளல்குண்டு , குலசேகரன் பேட்டை , தனிசியம் முதலிய ஊர்களை நிர்வகித்தும் , உருவாகியும் வந்துள்ளனர் . 13 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மகன் அம்மைய லக்கம்மா நாயக்கர் பதவிஏற்றார் . இவரின் மனைவியின் பெயர் ஏற்ரம்மா . இவர்காலத்தில் கதிரீஸ்வருக்கு கோவில் அமைக்கப்பட்டது . இவருக்கு பின் இவரது மகன் வள்ளால மக்கைய நாயக்கர் மற்றும் அவரின் துணைவியார் காமுலம்மாள் ஒருத்தநாட்டு கிராமத்தில் குருநாதசாமி கோவில் அமைத்துள்ளார் , சந்தையூர் கிராமத்தில் கதிலி நரசிங்கப்பெருமாள் கோவிலுக்கு மண்டபம் கட்டி உள்ளார் ,

[தொகு] கள்ளர்களை அடக்குதல்

அம்மைய நாயக்கனூருக்கு பக்கத்தில் இருந்த கள்ளர்கள் கர்நாடக மன்னரின் கால்நடைகளை திருடிச்சென்று விட்டனர் . இதனை அறிந்த வள்ளால மாகைய நாயக்கர் மற்றும் சில சேர்வைகாரர்களை அழைத்து கள்ளர்களை அடக்கி அவர்களிடம் இருந்த கால்நடைகளை மீட்டு கர்நாடக மன்னரிடம் தந்து உள்ளார் , இதனால் மனம் மகிழ்ந்த அவர் வீர வள்ளால மாக்கையா நாயக்கர் என்ற பட்டத்தினை நாயக்கருக்கு தருகிறார் . இவர் கல்லூத்து யோவார்பட்டி , பேதகாளிங்கம்மா நாயக்கர் பட்டி , குய்யம்மா நாயக்கனூர் போன்ற கிராமங்களை உருவாக்கி உள்ளார் . மதுரையில் உள்ள கூடல் அழகுப்பெருமாள் கோவிலில் நடைபெறும் தேரோட்டத்தை இவரே ஆரம்பித்து வைத்துள்ளார் என்பதால் இன்றும் இவர் வாரிசுதாரர்களுக்கு முதல் மரியாதையும் , இவர்கள் தேங்காய் தொட்டவுடன் தான் வடம் இழுப்பார் மேலும் இவர்களுக்கு பரிவட்டமும் கட்டப்படுகின்றன .

[தொகு] கோவில்களை அமைத்தல்

இவருக்கு அடுத்து இவர் மகன் கொந்தி பொம்ம நாயக்கர் அவரின் மனைவி வீரமுத்தம்மா இவர்களுக்கு பொன்னையா நாயக்கர் , காமைய நாயக்கர் என்ற மகன்கள் இருந்தனர் , இவரது காலத்தில் குருவி துறை சித்திரத்து வல்லவர் தேர் உருவாக்கப்பட்டுள்ளது . இவரது காலத்தில் போயர் என்று சொல்லப்படும் ஒட்டர்கள் அதிக அளவில் இங்கு குடியமர்ந்தனர் மேலும் அவர்களுக்கு பல்லக்கு தூக்கும் உரிமையும் கிடைத்துள்ளது . இதற்கு பின் பெரியமுதல்ல நாயக்கர் கதிரி நரசிங்கப்பெருமாளுக்கு பல விலை உயர்ந்த பொருட்களை தந்துள்ளார் , சந்தையூர் பகுதியில் கம்பளதார்களின் குல தெய்வமான கன்னிமார் கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது . குருநாதசாமி கோவிலுக்கும் பல தானங்களை தந்துள்ளார் . குழந்தைவேலு நாயக்கர் என்ற 16 வது பட்டதுக்காரர் குலசேகரன் கோட்டையில் மலை மேல் பொன்னும் பெருமாள் கோவிலுக்கு கலசக்கம்பம் மற்றும் தானங்கள் தந்துள்ளார் , பழனி தலத்தில் முன் மண்டபமும் கட்டி உள்ளார் .

[தொகு] கதலி நரசிங்கப் பெருமாள் கோவில்

கோவிலில் ஒரே கருவறையில் சிவனும் பெருமாளும் உள்ளனர். பெருமாள் தேவியர் இருவருடன் நிற்கிறார். இங்குச் சிவன் பெயர் கதலீஸ்வரர். பெருமாள் பெயர் கதிர் நரசிங்கப் பெருமாள்.கோவிலின் பெயர் கதலி நரசிங்கப் பெருமாள் கோவில். தமிழ்நாட்டில் அரியும் அரனும் ஒரே கருவையில் அமர்ந்திருக்கும் கோவில் இது ஒன்றுதான்.இந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்தது. இக்கோவிலை அமைத்தது இந்த பாளயக்கார்களே.

[தொகு] அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர்

சுமார் 400 வருடங்களுக்கு முன்பு பாளையகார் காமைய சாமி நாயக்கர் கனவில் ஆஞ்சிநேயர் தோன்றி வைகை ஆற்றில் தான் சுயம்புவாக உள்ளதாகவும் கோவில் அமைத்து வழிபடவும் சொல்ல காமைய சாமி நாயக்கரும் கோவில் அமைத்து வீர ஆஞ்சிநேயர் என்று பெயர் சூடி வழிபட்டு வந்தார் , இம்மாவட்டத்தில் உள்ள பழமையான ஆஞ்சிநேயர் கோவில் எனபது சிறப்பு , மேலும் இந்த பாளையதினை ஆட்சி செய்தவர்கள் பல கோவில்கள், ஊர்களை அமைத்துள்ளனர் . மேலும் பல்வேறு சமுக மக்களையும் தாங்கள் அமைத்த ஊர்களில் குடியமர்த்தினர் .

[தொகு] மேற்கோள்கள்

  • திண்டுக்கல் மாவட்ட தொல்லியல் கையேடு - முனைவர் சீதாராம் குருமூர்த்தி
  • [[1]]
  • [[2]]

திருமலை போடி நாயக்கர்

ஆந்திரம் மாநிலத்தில் இருந்து பதினோராம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு குடிபெயர்ந்த ராஜகம்பளம் மக்கள் மேற்கு மற்றும் கொங்கு பகுதிகளில் தங்கள் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டனர் . இவ்வாறாக குடிபெயர்ந்த ஒரு கூட்டத்தினர் தான் போடிநாயக்கனூர் பகுதியை ஆட்சி செய்த வம்சாவளியினர் .இவர்கள் வேகிளியார் சில்லவார் என்னும் உட்பிரிவைனை கொண்ட வம்சாவளியினர் . [1].

பொருளடக்கம்

 [மறை

[தொகு] கேரளா வர்மா

அக்காலத்தில் இப்பகுதி கேரளா வர்மா என்பவற்றின் கட்டுபாட்டில் இருந்தது , ராஜகம்பளம் மக்கள் இங்கு வந்து இவற்றை வென்று தங்களது பகுதிகளாக்கிக் கொண்டனர் . இங்கு இவர்கள் தனியாக சுயாட்சி செய்து வந்துள்ளனர் . சக்க நாயக்கர் என்பவர் இங்கு சிறு ஆட்சியினை செய்து வந்துள்ளார் . பாண்டியர்களிடம் நன்மதிப்பு பெற்று வந்தனர் .

[தொகு] திருமலை போடி நாயக்கர்

முத்து முள்ளக்கான் என்பவன் ராயரின் எல்லைகளுக்குள் மிகுந்த படைகளுடன் செல்லத் திட்டமிட்டு வருகையில் அவனுக்கு எதிராக நின்று திருமலை நாயக்கரை காத்ததால் இவருக்கு மன்னர் திருமலை என்ற பட்டத்தினை தருகின்றார் . இவருடைய குடும்பத்தினர் திருமலை என்ற பட்டத்தினை தங்களது முன்னால் சூடிகொள்கின்றனர்.

[தொகு] முதல் பாளையம்

அரியநாத முதலியார் மதுரை பாளையங்களை பிரிக்க திட்டம் இட்டபொழுது முதல் பாளையமாக பிரிக்கப்பட்ட பகுதி இவர்களுடையது தான் . திருமஞ்சனம் காடு என்று அழைக்கப்பட்ட இப்பகுதி பிறகு இவர்களின் குடும்ப பெயரான போடி என்பதை இனைத்து போடிநாயக்கனூர் என்று பெயர் மாற்றம் செய்தனர் .

[தொகு] திருமலை பங்காரு முத்து நாயக்கர்

நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் பாளையம் என்ற முறை கொண்டு வந்த பின்னர் முதல் முதலாக பொறுப்பேற்றவர் இவரே . இவர் பெரியகுளம் பகுதியில் உள்ள சுப்ரமணிய சாமி கோவில் கட்டியதோடு மண்டபபடியும் அளித்துள்ளார். இவர் இக்கோவிலுக்கு தேர் , மற்றும் பிரமோற்சவம் செய்ய பல பொருட்களை வழங்கி உள்ளார் . பல நந்தவனங்களை அமைத்துள்ளார் . இவர் புகழ்பெற்ற சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயில் அமைத்துள்ளார் . இவருக்கு பிறகு பொறுப்பேற்ற திருமலை போடி நாயக்கர் , ஜக்கன்ன நாயக்கர் , ராஜு நாயக்கர் பொறுப்பேற்றனர். இவர் குலசேகர தம்பிரான் என்ற மன்னனை வென்றுள்ளார் .[2]

[தொகு] கண்கொடுத்த அய்யன்

போடிநாயக்கனூர் மன்னர்கள் ஏனைய ராஜகம்பளம் மக்களை போலவே கடவுள் பக்தி அதிகம் கொண்டவர்கள் . மாந்தரிகம் போன்றவற்றிலும் திறமையானவர்கள் . இவர்களின் குல தெய்வம் ஜக்கம்மா தேவி . ஒரு நாள் வேளாளர் குலத்தில் பிறந்த ஒரு பெண் கண்பார்வை இழந்தததால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மனிடம் வேண்டுகிறார் . அன்று இரவு அப்பெண்ணின் கனவில் தோன்றிய அம்மன் போடிநாயக்கனூர் பகுதியை ஆட்சி செய்துக்கொண்டு இருக்கும் ராஜு நாயக்கர் என்பவரிடம் சென்று கண்பார்வை வேண்டும் என்று வேண்டினால் உன் பார்வை கிட்டும் என்று சொல்கிறார் . அப்பெண்ணும் அம்மன் சொல்வதை செய்ய அவருக்கு கண்பார்வை கிட்டுகிறது . அன்றிலிருந்து கண் கொடுத்த ராஜு நாயக்கர் அய்யன் என்று அழைக்கபட்டார் . மதுரை நாயக்கர்கள் இவரிடம் மிகுந்த மரியாதை கொண்டு இருந்தனர் . இவர் திருமலை நாயக்கருக்கு நெருக்கமான நண்பர் .

[தொகு] காமராஜ பாண்டிய நாயக்கர்

ஆங்கிலேயர்கள் ஆட்சி ஏற்பட்ட பிறகு முதல் முதலாக சட்டப்பேரவை கூடத்தில் தமிழில் பேசி தனது தமிழ் பற்றினை வெளிப்படுத்தினார் . ஆங்கிலம் இவருக்கு தெரிந்திருந்த நிலையிலும் இவர் தமிழில் பேசினார் . இவரது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிறிய குற்றங்கள் கூட நடைபெறவில்லை என்று ஆங்கிலேய கலக்டர் ரோஸ் பீட்டர் என்பவர் தனது நூலில் பதிந்துள்ளார் . இவர் வேட்டை ஆடுவதில் வல்லவர் . திருமலை போடி காமராசு பாண்டிய நாயக்கர் என்னும் வாரிசுதாரர் தேவதானப்பட்டி பகுதியில் அமைந்துள்ள சத்திரம் , சாவடிகளை அமைத்துள்ளார் . இவர் பாதசாரிகளுக்கு விடுதிகள் அமைத்துள்ளார் . இவர் விவசாயத்திற்கு முன்னுரிமை தந்துள்ளார் . இவர் வெட்டிய கம்மாய் இன்றும் காமராசு பூபால சமுத்திர கம்மாய் என்று அழைக்கபடுகிறது . மரம் நடுதல் , காடுகளை பாதுகாத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தினார் .

[தொகு] ஸ்ரீ காமுலு அம்மாள்

ஸ்ரீ காமுலு அம்மாள் கண்டமனூர் ஜமீனில் பிறந்து போடிநாயக்கனூர் பகுதிக்கு மணமகளாக வந்தவர். இவரின் மகளை சாப்டூர் ஜமீன்ந்தாருக்கு திருமணம் செய்து வைத்தார். இவர் போடிநாயக்கனூர் மற்றும் சுற்று புற மக்களின் நலனுக்காக மருத்துவமனை அமைத்துள்ளார். இவர் வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயில் , விக்னேஸ்வர கோவில் முதலியவற்றை அமைத்துள்ளார்; பல சத்திரங்களை கட்டயுள்ளார். கல்யாண மகால் அமைத்ததோடு விக்டோரியா மெமோரியல் பள்ளிக்கு அடிக்கல் நாட்டி பொருளுதவி செய்துள்ளார்.[3]

[தொகு] மேற்கோள்கள்

  1. http://books.google.co.in/books?id=oFwDWt2N29cC&pg=PA183&dq=bodinayakanur+nayak&hl=ta&ei=u3fDTr3VMcXqrQf3q7T0Cw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CC4Q6AEwAQ#v=onepage&q&f=false
  2. http://books.google.co.in/books?id=oFwDWt2N29cC&pg=PA183&dq=bodinayakanur+nayak&hl=ta&ei=u3fDTr3VMcXqrQf3q7T0Cw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CC4Q6AEwAQ#v=onepage&q&f=false
  3. http://books.google.co.in/books?id=oFwDWt2N29cC&pg=PA183&dq=bodinayakanur+nayak&hl=ta&ei=u3fDTr3VMcXqrQf3q7T0Cw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CC4Q6AEwAQ#v=onepage&q&f=false

விருப்பாட்சி பாளையம்

http://tawp.in/r/2vcm

பழனி [திண்டுக்கல் ]] சாலையில் சத்திரபட்டிக்கு மேற்கில் மூன்று கல் தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது . சுதரபாண்டியனின் கல்வெட்டில் குறிப்பிட்ட திருபாக்கியம் என்ற ஊரே இந்த விருப்பாட்சி . நாயக்கர் ஆட்சிக்காலத்தில் வருமானம் தரக்கூடிய ஜமினாக இருந்துவந்துள்ளது .

பொருளடக்கம்

 [மறை

[தொகு] திருமலை சின்னப்பா நாயக்கர்

இப்பாளையத்தை அமைத்தவர்கள் ராஜகம்பளம் என்று சொல்லப்படும் நாயக்கர் இனத்தின் உட்பிரிவினர் . இவர்கள் தங்களை தொட்டிய நாயக்கர்கள் என்றும் அழைத்துக்கொள்கின்றனர் . இவர்கள் விஜயநகர் மன்னரிடம் போர் வீரர்களாக பணியாற்றியவர்கள் . அடைப்பம் என்ற உரிமையையும் பெற்றவர்கள் , அடைப்பம் என்பது உயர் ஜாதியினருக்கு மட்டும் கிடைக்கும் உரிமை . கி.பி,1381 இல் தில்லி பாதுசாவின் சார்பாக பாலு சாயிபு என்பவர் விஜயநகரப் பேரரசின் மீது படையெடுத்துவர விஜயநகர பேரரசின் சார்பாக விருப்பாட்சி பாளையக்காரரின் முன்னோரான கம்பளத்தார்கள் மேலப்பட்டி சின்னப்பா நாயக்கர் படைநடத்தி பாலுசாயுபுவை ( இசுலாமியனை ) வெற்றிக்கண்டார் என்பதால் ராயர் மிகவும் மகிழ்ந்து சின்னப்பா நாயக்கருக்கு பல வெகுமதிகளை அளித்துள்ளார் . அத்துடன் மேலப்பட்டி சின்னப்பா நாயக்கரின் வம்சா வழியினர் தங்கள் பெயருக்கு முன் ராயரின் பெயரான திருமலை என்பதை பயன்படுத்திக்கொள்ள அனுமதியும் அளித்துள்ளார் என்பதால் விருப்பாட்சி பாளையத்தில் வரும் அனைவரும் தங்கள் பெயருக்கு முன் திருமலை என்பதை போடும் வழக்கம் கொண்டு இருந்தனர் .

[தொகு] தமிழகம் வருதல்

இசுலாமிய மன்னன் ஒருவன் இவர்கள் இன பெண்ணை திருமணம் செய்யக்கேட்டதாகவும் அதனால் தெற்கு நோக்கி வந்தனர் என்று கூறுகின்றனர் . இவர்கள் தெற்கு நோக்கி சின்னப்பா நாயக்கர் தனது இனத்தாருடன் வந்து உருவாக்கிய ஊர் தற்போது உள்ள குத்துளுப்பை என்பது .

[தொகு] பாளையகார்களின் வரலாறு

இவருடைய(சின்னப்பா நாயக்கர் ) தம்பி அப்பண்ண நாயக்கர் குத்துளுப்பைக்கு தெற்காக காடுவெட்டி வீடுகள் அமைத்து கொத்தப்பள்ளி தாதமபேட்டை என்ற ஊரை அமைத்து கோட்டை கட்டினார் . இவருடைய மற்றொரு தம்பி எர்ரன்ன நாயக்கர் குதுளுப்பைக்கு கிழக்காக ரெண்கமலைக்கு பக்கத்தில் இடையகோட்டை என்ற ஊரை உருவாக்கினர். தனது தம்பிகளின் இருப்பிடத்துக்கு மேற்காக ஒரு கோட்டையை அமைத்து பெரிய கோட்டை என்று பெயர் சூடினார் . இங்கு தனது குலதெய்வமான லேக்குவம்மாவுககும், கதிர நாதருக்கும் கோவில் கட்டி பூஜை செய்துவந்துள்ளார் . இன்றும் இவர்களின் வம்சாவளியினர் வழிபட்டு வருகின்றனர் . இவர் மேலும் வராககிரி மலை சாரலின் வீடுகள் அமைத்து பெருமாள் குளம் அமைத்து நீல மலை அழகருக்கும் , விருப்பாட்சி இசுவரனுக்கும் கோவில் அமைத்து விருப்பாட்சி என்ற பட்டணத்தை உருவாக்கினார் . இப்பகுதிக்கு கிழக்கில் கலக்கரப்பன் குன்றில் குழந்தை வேலப்பர் கோவிலும் , குழந்தை வேலர் மலையில் குழந்தை வேலர் கோவிலும் உருவாக்கினார் .

[தொகு] பல ஊர்களை உருவாக்குதல்

மேலும் தனது சொந்தகாரர்களை தனி தனியே ஊர்களை அமைத்து குடிபெற செய்தார் , சிக்கம்மா நாயக்கரின் பெயரால் சிக்கம்ம நாயக்கர் பட்டி என்றும் , கள்ளமந்த நாயக்கர் என்பவர் கள்ளிமந்தயம் என்றும் , கரியப்பா நாயக்கர் என்பவர் கரியாம்பட்டி என்ற ஊரையும் , புலியப்பா நாயக்கர் என்பவர் புலியூர் நத்தம் என்றதையும் , குறி சின்னம்மா நாயக்கர் கீரனூர் என்ற ஊரையும் , கொத்த வேலப்ப நாயக்கர் என்பவர் கொத்தயம் என்ற ஊரையும் , மஞ்ச நாயக்கர் என்பவர் மஞ்ச நாயக்கர் பட்டி , சிந்தலவாட நாயக்கர் என்பவர் சிந்தலவாடப்பட்டி , போடப்பா நாயக்கர் என்பவர் போடுவார் பட்டி என்பதையும் , பொருலாண்டி நாயக்கர் என்பவர் பொருளா நாயக்கர் பட்டி என்பதையும் , வேலப்ப நாயக்கர் என்பவர் குருமாபட்டி என்ற கிராமங்களையும் உருவாக்கியதாக பாளையப்பட்டு வம்சாவளி கூறுகிறது .

[தொகு] கதிர திருமலை சின்னப்பா நாயக்கர்

இவரது மகன் கதிர திருமலை சின்னப்பா நாயக்கர் மதுரை விசுவநாத நாயக்கர் அவர்களின் சிறப்பு நண்பராக இருந்தவர் , மேலும் இது சிறப்பு பாளையமாகவும் இருந்து வந்துள்ளது , அவரின் மகன் திருமலை குப்பண்ணா நாயக்கர் பெரிய மலையில் பெரியூர் என்ற ஊரை உருவாக்கினார் , அதில் மங்களநாத சாமி கோவில் அமைத்துள்ளார் . இதற்கு மேற்கில் பாச்சலூர் என்ற ஊரையும் , வடகாடு , கண்ணனூர் , வென்னமலை என்ற கிராமங்களை உருவாக்கி அதில் பழங்குடியினரை குடியமர்த்தி பழங்கள் , காய்கள் சாகுபடி செய்ய உத்தரவு இட்டுள்ளார் . இவருக்கு திருமலை பலபத்திர ராம சின்னப்பா நாயக்கர் பட்டக்காரர் என்றும் , ரெகுராம நாயக்கர் என்றும் இரண்டு மகன்கள் இருந்துவந்தனர் . முதலாவது மகன் பாளையத்தை ஆட்சி செய்ய , இளையவர் தானும் ஆட்சி செய்ய வேண்டும் என்பதால் ரெண்கமலைக்கு கிழக்காக கவுதமர் கோட்டை , குட்டம் , கல்வார்பட்டி, கூவனுத்து, புதுக்கோட்டை முதலிய கிராமங்களை உருவாக்கி அப்பகுதியை ஆட்சி செய்து வந்துள்ளார் , இவரது காலத்தில் நன்காஞ்சி ஆற்றில் அணை கட்டியதோடு வாய்க்காலும் வெட்டியுள்ளார் . இவர் சின்ன குளம் , பெரிய குளம் என்ற குளங்களையும் வெட்டி உள்ளார் . இவர் உம்பிளியரை ஒரு பகுதியில் குடி அமர்த்தி உம்பியார் பட்டி என்ற கிராமத்தை உருவாக்கினார் . கனககிரி குழந்தை வேலப்பருக்கு விக்ரகம் , ரதம் , தேரோட்ட நிகழ்வையும் செய்துள்ளார் .

[தொகு] பல இனத்து மக்களையும் குடியேற்றல்

திருமலை எர தம்ம சின்னப்பா நாயக்கர் காலத்தில் சடையான் குளம் , சடையன் அணை ஒன்றையும் ஏற்படுத்தி உள்ளார் , இக்குளத்திற்கு பின்னால் அழகு நாச்சியம்மா கோவில் , சிவன் கோவில் போன்றவற்றை அமைத்து அதில் பிராமணர் , இல்லத்து பிள்ளைமார் , பண்டாரம் போன்ற இனத்தோரை கோவில் நிர்வாகம் செய்ய கோவிலுக்கு சுற்றி குடியமர்த்தினார் . இவருக்கு பின் திருமலை வராககிரி சின்னப்பா நாயக்கர் காலத்தில் தாசரி நாயக்கர் என்பவரின் பெயரால் தாசரி பட்டி , புதுகோட்டை என்ற கிராமமும் , லக்கம்மா நாயக்கர் பெயரால் லக்கன்ன கோட்டை என்ற கிராமமும் , அதப்ப நாயக்கர் என்பவரின் பெயரால் அதிக்கோட்டை என்ற கிராமமும் , கொல்லம்மா நாயக்கர் என்பவர் கொல்லப்பட்டி , சின்னவேலப்பா நாயக்கர் சின்னவேலம்பட்டி , காளாஞ்சி நாயக்கர் காளாஞ்சி பட்டியையும் , அன்னம்மா நாயக்கர் அன்னம்மா நாயக்கர் என்ற ஊரினையும் , காபிலிய நாயக்கர் என்பவர் காபிலிய பட்டி , அப்பள்ள நாயக்கர் என்பவர் அப்பிளிகை , வீரப்ப நாயக்கர் என்பவர் வீரலப்பட்டி என்ற கிராமங்களை உருவாக்கி வந்துள்ளனர் ,. மேலும் தங்களுக்கு என்று பல இனத்து மக்களையும் இங்கு குடி அமர்த்தினர் , அக்கால கட்டத்தில் மேற்கு தமிழகம் பெரும்பாலும் ஊர்கள் இல்லாமல் காடுகளாக இருந்து வந்துள்ளன . இவ்வாறான குடியேறியவர்கள் பல கிராமங்களை உருவாக்கி அங்கு தங்களை குடி அமர்திக்கொண்டனர் .

[தொகு] விவசாயத்தை பெருக்கினார்

இவருடைய மகன் நயினாத்த திருமலை சின்னப்பா நாயக்கர் வைகாணி , மண்டவாடி , தங்கச்சி அம்மாபட்டி கிராமங்களை உருவாக்கி உள்ளனர் . இவருக்கு பாதை காவலர் என்ற பட்டமும் மதுரை மன்னர் முத்து வீரப்ப நாயக்கர் அவர்களால் வழங்கப்பட்டது . இவருடைய மகன் திருமலை குப்பள்ள சின்னப்பா நாயக்கர் நல்லதங்காள் ஓடை ஆற்றில் அணையை கட்டி வாய்கால் வெட்டி உள்ளார் , இவர் காலத்தில் கருங்குளம் , சிந்தல்வாடான் பட்டியில் உள்ள கவுண்டன் குளம் ( காபிலியர் குளம் ) , மஞ்சனாயக்கன் பட்டியில் செங்குளம் , பொடுவாற்பட்டியில் பெரிய குளம் ஆகிய பல குளங்களை வெட்டி நீர் பாசனத்துக்கு , விவசாயத்துக்கு பயன் பெயர் செய்துள்ளனர் .

[தொகு] மதுரையும் விருப்பட்சியும்

இவரது காலத்தில் மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சி செய்து வந்துள்ளார் . மதுரை நாயக்கர்களுக்கும் மைசூருக்கும் நடந்த போரில் விருப்பாட்சி பாளையமும் பங்கு பெற்றது , அதே போல சேதுபதி மன்னரிடம் மதுரை நாயக்கர் போர் செய்த போதும் விருப்பாட்சி மதுரைக்கே சாதகமாக இருந்தது . இவரது மகன் திருமலை தாசரி சின்னப்பா நாயக்கர் கொத்தயம் கிராமத்தில் வேப்பங்குளம் , பொருலூரில் சின்னக்குளம் போன்றவற்றை வெட்டியுள்ளார் . இதற்கு பின் பட்டமேற்ற திருமலை பாபன்ன சின்னப்பா நாயக்கர் மதுரையில் சொக்கநாத நாயக்கர் மன்னராக இருந்தார் , அப்பொழுது தஞ்சை மற்றும் மதுரை நாயக்கர்களுக்கு போர் ஏற்பட மதுரைக்கு ஆதரவாக விருபாட்சி இருந்தது , இவரது மகன் திருமலை பாபன்ன சின்னப்பா நாயக்கர் குமாரர் விருப்பாட்சியில் கதிரனார் சிங்கப்பெருமாள் கோவில் , சிவன் கோவில் கட்டினார் , மேலும் பிராமணர் , பண்டாரங்களை குடி அமர்த்தினர் , இவருக்கு பின் திருமலை முத்துவேல் சின்னப்பா நாயக்கர் காலத்தில் பெரியக்கோட்டை கோவிலுக்கு ரத்தமும் , விக்ரகங்களும் செய்துள்ளார் , மேலும் ஏழை பிராமணர் , பண்டாரம் போன்றோர்களுக்கு மானியமாக பல நிலங்களை தந்துள்ளார் ,

[தொகு] மைசூர் கட்டுப்பாடு

இதன் பின் திருமலை வேங்கட சின்னப்பா நாயக்கர் நீலமலை அழகிரி கோவில் , மேலும் அங்கு தனது முன்னோர்களின் சிலைகள் முதலியவற்றை செய்தார் , ஏனைய ராஜகம்பளம் இனதோர்களை போலவே வேட்டை ஆடுவதில் ஆர்வம் கொண்டவர் , இவருக்கு பின் இவர் மகன் எதிராமானஜகிரி தமிழ் பற்று கொண்டவர் புலவர்கள் பலரை ஆதரித்துள்ளார் , இவரது பாட்டியான நல்லிகாமு வேங்கிமளைக்கு படிகள் அமைத்தும் , முத்து சமுத்திரம் என்ற பெயரில் ஒரு குளமும் வெட்டியுள்ளார் , அடுத்த பாளையக்காரர் வராககிரி சின்னப்பா நாயக்கர் காவேரியம்மா பட்டி , கரட்டுப்பட்டி , ரெட்டியாம்பட்டி ஊர்களை அமைத்து குளங்களை வெட்டி உள்ளார் , இதற்க்கு அடுத்து திருமலை தாசாரி சின்னப்பா நாயக்கர் காலத்தில் தான் மதுரை நாயக்கர் ஆட்சி முடிவு பெறுவதால் குழப்பங்களும் , சண்டைகளும் பாளையம் முழுவதும் இருந்தது , இதற்க்கு பின் இந்தபாளையம் மைசூர் கட்டுபாட்டில் வருகிறது . என்றாலும் வரி கட்ட மறுத்தே வந்துள்ளனர் , இவர்களின் வரி வாங்க மைசூர் மன்னர்கள் பல இடர்பாடுகள் செய்தனர் ,

[தொகு] விடுதலை போராட்டம்

இப்பாளையம் பிற்காலத்தில் பாளையக்கரர் கூட்டமைப்பு ஏற்படுத்தி ஆங்கிலேயருக்கு எதிராக போராடி மாண்ட பலரை தந்துள்ளது ,பார்க்கவும் :விருப்பாச்சி கோபால நாயக்கர்