திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஊர்,
நாயக்கர் ஆட்சிக்காலத்தில் சிறப்பு பெற்ற பாளையமாகவும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஜமினாகவும் இருந்து வந்த வரலாற்று சிறப்பு மிக்க ஊர் ,
[தொகு] பாளையம் உருவாகுதல்
பாளையத்தின் முன்னவரான பெஞ்சை மாகையா நாயக்கர் அவர்கள் கி.பி.1435 இல் விஜயநகர மன்னரிடம் போர் வீரர்களாக பணிபுரிந்தவர்கள் .
விசுவநாத நாயக்கர் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட 72 பாளையங்களில் ஒன்றாக இருந்து வந்தது . இவர்கள் மதுரைக்கு காவல் என்ற உரிமையை பெற்றுவந்தனர் . இவர்கள்
ராஜகம்பளம்
என்ற நாயக்கர் இனத்தின் உட்பிரிவினர் . மதுரைக்கு காவலாக இவர்கள்
இருந்ததால் பெஞ்சை மாகையா நாயக்கர் மற்றும் அவர் சார்த்த கம்பளத்து
நாயக்கர்கள் மதுரைக்கு வடமேற்கில் சிறுமலை மற்றும் சுற்றில் உள்ள சில
கிராமங்களில் குடியமர்ந்தனர் . இதில் இவர்கள் ஒரு கோட்டையை உருவாக்கி
அம்மைய நாயக்கனூர் பாளையத்தை உருவாக்கினர் ,
[தொகு] ஊர்களை உருவாக்குதல்
வேடசந்தியூர் , வெள்ளோடு , பச்சைமலன் கோட்டை ம,சம்புதரைகோட்டை,
ஒருதநாட்டு கிராமம் , பாளயக்கவுண்டன் பட்டி , எதுலூட்டு , சிதர்னத்தம்.
மேட்டுப்பட்டி , மட்டப்பாறை , பள்ளப்பட்டி , குள்ளல்குண்டு , குலசேகரன்
பேட்டை , தனிசியம் முதலிய ஊர்களை நிர்வகித்தும் , உருவாகியும் வந்துள்ளனர்
. 13 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மகன் அம்மைய லக்கம்மா நாயக்கர்
பதவிஏற்றார் . இவரின் மனைவியின் பெயர் ஏற்ரம்மா . இவர்காலத்தில்
கதிரீஸ்வருக்கு கோவில் அமைக்கப்பட்டது . இவருக்கு பின் இவரது மகன் வள்ளால
மக்கைய நாயக்கர் மற்றும் அவரின் துணைவியார் காமுலம்மாள் ஒருத்தநாட்டு
கிராமத்தில் குருநாதசாமி கோவில் அமைத்துள்ளார் , சந்தையூர் கிராமத்தில்
கதிலி நரசிங்கப்பெருமாள் கோவிலுக்கு மண்டபம் கட்டி உள்ளார் ,
[தொகு] கள்ளர்களை அடக்குதல்
அம்மைய நாயக்கனூருக்கு பக்கத்தில் இருந்த கள்ளர்கள் கர்நாடக மன்னரின்
கால்நடைகளை திருடிச்சென்று விட்டனர் . இதனை அறிந்த வள்ளால மாகைய நாயக்கர்
மற்றும் சில சேர்வைகாரர்களை அழைத்து கள்ளர்களை அடக்கி அவர்களிடம் இருந்த
கால்நடைகளை மீட்டு கர்நாடக மன்னரிடம் தந்து உள்ளார் , இதனால் மனம்
மகிழ்ந்த அவர் வீர வள்ளால மாக்கையா நாயக்கர் என்ற பட்டத்தினை நாயக்கருக்கு
தருகிறார் . இவர் கல்லூத்து யோவார்பட்டி , பேதகாளிங்கம்மா நாயக்கர் பட்டி
, குய்யம்மா நாயக்கனூர் போன்ற கிராமங்களை உருவாக்கி உள்ளார் . மதுரையில்
உள்ள கூடல் அழகுப்பெருமாள் கோவிலில் நடைபெறும் தேரோட்டத்தை இவரே
ஆரம்பித்து வைத்துள்ளார் என்பதால் இன்றும் இவர் வாரிசுதாரர்களுக்கு முதல்
மரியாதையும் , இவர்கள் தேங்காய் தொட்டவுடன் தான் வடம் இழுப்பார் மேலும்
இவர்களுக்கு பரிவட்டமும் கட்டப்படுகின்றன .
[தொகு] கோவில்களை அமைத்தல்
இவருக்கு அடுத்து இவர் மகன் கொந்தி பொம்ம நாயக்கர் அவரின் மனைவி
வீரமுத்தம்மா இவர்களுக்கு பொன்னையா நாயக்கர் , காமைய நாயக்கர் என்ற
மகன்கள் இருந்தனர் , இவரது காலத்தில் குருவி துறை சித்திரத்து வல்லவர்
தேர் உருவாக்கப்பட்டுள்ளது . இவரது காலத்தில் போயர் என்று சொல்லப்படும்
ஒட்டர்கள் அதிக அளவில் இங்கு குடியமர்ந்தனர் மேலும் அவர்களுக்கு பல்லக்கு
தூக்கும் உரிமையும் கிடைத்துள்ளது . இதற்கு பின் பெரியமுதல்ல நாயக்கர்
கதிரி நரசிங்கப்பெருமாளுக்கு பல விலை உயர்ந்த பொருட்களை தந்துள்ளார் ,
சந்தையூர் பகுதியில் கம்பளதார்களின் குல தெய்வமான கன்னிமார் கோவிலும்
அமைக்கப்பட்டுள்ளது . குருநாதசாமி கோவிலுக்கும் பல தானங்களை தந்துள்ளார் .
குழந்தைவேலு நாயக்கர் என்ற 16 வது பட்டதுக்காரர் குலசேகரன் கோட்டையில் மலை
மேல் பொன்னும் பெருமாள் கோவிலுக்கு கலசக்கம்பம் மற்றும் தானங்கள்
தந்துள்ளார் ,
பழனி தலத்தில் முன் மண்டபமும் கட்டி உள்ளார் .
[தொகு] கதலி நரசிங்கப் பெருமாள் கோவில்
கோவிலில் ஒரே கருவறையில் சிவனும் பெருமாளும் உள்ளனர். பெருமாள் தேவியர்
இருவருடன் நிற்கிறார். இங்குச் சிவன் பெயர் கதலீஸ்வரர். பெருமாள் பெயர்
கதிர் நரசிங்கப் பெருமாள்.கோவிலின் பெயர்
கதலி நரசிங்கப் பெருமாள் கோவில்.
தமிழ்நாட்டில் அரியும் அரனும் ஒரே கருவையில் அமர்ந்திருக்கும் கோவில் இது
ஒன்றுதான்.இந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்தது. இக்கோவிலை அமைத்தது இந்த
பாளயக்கார்களே.
[தொகு] அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர்
சுமார் 400 வருடங்களுக்கு முன்பு பாளையகார் காமைய சாமி நாயக்கர் கனவில்
ஆஞ்சிநேயர் தோன்றி வைகை ஆற்றில் தான் சுயம்புவாக உள்ளதாகவும் கோவில்
அமைத்து வழிபடவும் சொல்ல காமைய சாமி நாயக்கரும் கோவில் அமைத்து வீர
ஆஞ்சிநேயர் என்று பெயர் சூடி வழிபட்டு வந்தார் , இம்மாவட்டத்தில் உள்ள
பழமையான ஆஞ்சிநேயர் கோவில் எனபது சிறப்பு , மேலும் இந்த பாளையதினை ஆட்சி
செய்தவர்கள் பல கோவில்கள், ஊர்களை அமைத்துள்ளனர் . மேலும் பல்வேறு சமுக
மக்களையும் தாங்கள் அமைத்த ஊர்களில் குடியமர்த்தினர் .
[தொகு] மேற்கோள்கள்
- திண்டுக்கல் மாவட்ட தொல்லியல் கையேடு - முனைவர் சீதாராம் குருமூர்த்தி
- [[1]]
- [[2]]
No comments:
Post a Comment