திண்டுக்கல் மாவட்டத்தில்
அமைந்துள்ள இந்த ஊர் , நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் பாளையமாக இருந்தது ,
கி. பி. 10 ஆம் நூறாண்டில் பிராமணர்களும், வணிகர்களும் ( செட்டியார்களும்
) வாழ்ந்த பகுதியாக இது இருந்து வந்தது . கி.பி. 11 நூற்றாண்டில் ஆட்சி
செய்த சுந்திர சோழ பாண்டியன் பிராமணர்களுக்கும் , வணிகர்களுக்கும்
இப்பகுதியில் பல மானியங்களை தந்துள்ளதாக கல்வெட்டு கூறுகிறது . நத்தம் பகுதியை நாயக்கர் ஆட் சிக்காலத்தில்
லிங்க நாயக்கர் ஆட்சி செய்துள்ளார் , இவர் கட்டிய கோட்டை இன்றும் இடிந்த
நிலையில் உள்ளது , பிறகு இப்பகுதிக்கு காவலுக்காக கள்ளர் மற்றும் வலயர்களை
நியமித்துள்ளார் ,
[தொகு]செப்பேடுகள்
லிங்க நாயக்கரினை பற்றிய பல செப்பேடுகள் இந்த பகுதியில் கிடைத்துள்ளது , இவர் ராஜகம்பளம் என்ற நாயக்கர் பிரிவினை சேர்ந்தவர் , மதுரை மன்னர் சொக்கநாத நாயக்கர் அவர்களுக்கு
தளவாயாக பணி புரிந்தவர் இவரை தொட்டியர் என்றும் ஒரு செப்பேட்டில் அழைக்கப்
படுகிறார் , மதுரை ஆட்சியை தானே கைப்பற்றிவிட எண்ணி பல சூழ்சிகளை சொக்கநாத
நாயக்கருக்கு எதிராக செய்தவர் என்றாலும் சொக்கநாதர் இவரின் சூழ்ச்சியை
முறியடித்தார் . வடக்கில் இருந்து மதுரைக்கு வரும் வழியில் நத்தம்
உள்ளதால் வடக்கில் இருந்து வரும் அனைத்து படை எடுப்புகளையும் சந்தித்து
உள்ளது , இதனால் தங்கள் இனத்தவர்களோடு கள்ளர்கள் , வலையர்கள் ,
குடும்பர்கள் போன்றோரையும் காவலுக்காக நியமித்துள்ளார் . இங்கு வீரக்குடி
வெள்ளாளர் என்று அழைக்கப்படும் பிள்ளைமார் ஜாதியை சேர்ந்தவர்களுக்கு பல
மானியங்களை அளித்துள்ளார் , மேலும் குடும்பர்களுக்கு வாய்க்கால்
மேற்பார்வை செய்ய பட்டயம் செய்துள்ளார் , இது இன்றும் இங்குள்ள குடும்பர்
( பள்ளர் ) இனத்தவர்களிடம் உள்ளது ,
[தொகு]கோவில்களை அமைத்தல்
கி.பி,1773
இல் சில்லிளிங்கய்ய நாயக்கர் இப்பகுதியை ஆட்சி செய்துக்கொண்டு இருக்கும்
நிலையில் நத்தம் கயிலாசநாதர் கோவில் மண்டபங்களை அமைத்துள்ளார் .
கி..பி.1791 இல் கல்வெட்டு ஒன்று சில்லப்பா நாயக்கர் பட்டியை சேர்ந்த
முத்துலிங்க நாயக்கர் கோவில்பட்டி சாத்திரத்தை மானியமாக தந்ததை கூறுகிறது
, லிங்க நாயக்கர் சுவர் ஓவியங்களை பல அமைத்துள்ளார் , லிங்க நாயக்கரின்
உருவமும் இந்த கோவிலில் அமைக்கப்பட்டுள்ளது . தெலுங்கு எழுத்துகளால்
இவரின் பெயர் இருந்துவந்துள்ளது என்பதில் இருந்து தெலுங்கு மொழியை எழுத
தெரிந்தவர்களாக இங்குள்ள நாயக்கர்கள் அக்காலத்தில் இருந்து வந்துள்ளனர் .
பலர் இப்பாளையத்தை ஆட்சி செய்தாலும் லிங்க நாயக்கரை பற்றிய செய்தி மட்டுமே
அதிக அளவில் காணப்படுகிறது .
[தொகு]மேற்கோள்கள்
- திண்டுக்கல் மாவட்ட தொல்லியல் கையேடு - முனைவர் சீதாராம் குருமூர்த்தி
No comments:
Post a Comment