Wednesday, 7 December 2011

ராமகிரி பாளையம்,அம்பாத்துறை பாளையம்

ராமகிரி பாளையம்

திண்டுக்கலில் இருந்து குஜிலியம்பாறை வழியாக கரூர் செல்லும் சாலையில் அமைத்துள்ள இவ்வூர் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் பாளையமாக இருந்தது , ராமகிரியை சாமா நாயக்கர்கள் என்ற ராஜகம்பளம் குடியினர் 40 தலைமுறையாக ஆட்சி செய்து வந்துள்ளனர் , இவ்வூரில் ஒரு கோட்டை உருவாக்கி அங்கு தங்கள் இன மக்களையும் சுற்று பட்டிகளில் வாழும் பிற மக்களையும் நிர்வாகித்து வந்துள்ளனர் , இவர்களுக்கு இரும்பு முறுக்கி சாமா நாயக்கர் , தலைவெட்டி சாம நாயக்கர் என்ற பட்டங்களும் உண்டு . இவர்கள் பழனி கோவிலுக்கு பல சாத்திரங்களை கட்டி உள்ளனர் , இவர்கள் கலியான நரசிம்ம சாமி கோவிலை அமைத்ததோடு பல தானங்களையும் செய்து வந்துள்ளனர் , இவர்கள் பல ஊர்களை உருவாக்கி உள்ளனர் மேலும் பிற்காலத்தில் தமிழகதிற்கு குடியேறிய தங்கள் இனத்தவர்களான வடுகர்என்று சொல்லும் நாயக்கர் இன மக்களை தாங்கள் வாழும் பகுதியில் குடியமர்த்தினர் .
அம்பாத்துறை பாளையம்:
 கி.பி,1600 இல் விசுவநாத நாயக்கர் அவர்களால் நிறுவப்பட்ட 72 பாளையங்களில் அம்பாத்துறையும் ன்று , கி,பி.௧௮௦௧ முதல் இது ஜமினாக இருந்து வந்துள்ளது . பாளையம் மற்றும் ஜமின் நிர்வாகத்தை செய்தவர்கள் கம்பளத்து நாயக்கர் என்று சொல்லும் நாயக்கர் இனத்து மக்களே , ஜமின் காலத்தில் கட்டப்பட்ட அரண்மனை இன்றும் அப்படி உள்ளது , இங்குள்ள காளியம்மன் கோவில் , காட்டு மாரியம்மன் கோவில் போன்றவற்றை இவர்களே கட்டி உள்ளனர் . விருப்பாச்சி கோபால நாயக்கர்ஆங்கிலேயருக்கு எதிராக பாளயகார்களைக் கொண்டு கூட்டமைப்பு ஏற்படுத்தும் நிலையில் இந்த பாளையகார்களும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டனர் , மேலும் இவர்கள் மதுரை நாயக்கர் மன்னர்களிடம் நெருங்கிய மக்களாகவும் இருந்து வந்துள்ளனர் .

No comments:

Post a Comment